search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பாளையங்கோட்டையில் 18-ந்தேதி இரவு நெல்லையப்பர் கோவில் சார்பில் மகா சிவராத்திரி விழா
    X

    பாளையங்கோட்டையில் 18-ந்தேதி இரவு நெல்லையப்பர் கோவில் சார்பில் மகா சிவராத்திரி விழா

    • 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது
    • பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    நெல்லையப்பர் கோவில் சார்பில் வருகிற 18-ந்தேதி இரவு பாளையங்கோட்டையில் மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது என்று கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை அறிவிப்பின்படி முக்கிய சிவாலயங்களான மயிலாப்பூர் கபாலீசுவரர், தஞ்சை பிரகதீசுவரர், கோவை பட்டீசுவரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் மற்றும் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆகிய 5 கோவில்களிலும் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

    இதையொட்டி நெல்லையப்பர் கோவில் சார்பில் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் தசரா விழா நடைபெறும் (எருமை கடா) மைதானத்தில் வருகிற 18-ந்தேதி மாலை 4 மணி முதல் 19-ந்தேதி அதிகாலை 6 மணி வரை மகா சிவராத்திரி பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    Next Story
    ×