என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
கும்பகோணம் மகாமக குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற கூடாது: பக்தர்கள் கோரிக்கை
- தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
- மாசிமக விழா தீர்த்தவாரி மார்ச் 6-ந்தேதி நடைபெற உள்ளது.
அகில பாரத இந்து ஆன்மிக பேரவை மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் கண்ணன் கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணத்தில் மாசிமக விழா தீர்த்தவாரி வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நாளில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கும்பகோணத்திற்கு வந்து மகாமக குளம் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம். மேலும் பலர் மகாமக குளம் பகுதியில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கும்பகோணம் மகாமக குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்க அரசு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
தற்போது கொரோனா அச்சம் நீங்கியுள்ள நிலையில் ஆகம விதிகளின்படி மகாமக குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பங்குனி மாதம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா மகாமக குளத்தில் நடைபெறுவது வழக்கம். திருவிழாவுக்கு ஒரு மாத கால இடைவெளி மட்டுமே உள்ள நிலையில் மகாமக குளத்தில் தற்போது நிரம்பியுள்ள தண்ணீரை வெளியேற்றினால் தெப்ப திருவிழாவுக்கு குளத்தில் போதிய தண்ணீர் இருக்காது. எனவே தற்போது மகாமக குளத்தில் நிரம்பி உள்ள தண்ணீரை வெளியேற்ற கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்