search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவிலில் 5-ந்தேதி தேரோட்டம்
    X

    மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவிலில் 5-ந்தேதி தேரோட்டம்

    • 6-ந்தேதி பரிவேட்டை, குதிரை வாகன பவனி நடக்கிறது.
    • 7-ந்தேதி மகாதரிசனம் நடக்கிறது.

    திருப்பூர் மங்கலத்தை அடுத்த மலைக்கோவில் பகுதியில் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கிராம சாந்திபூஜை நடைபெற்றது. பின்னர் நேற்று காலை 11 மணிக்கு மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு எட்டுத்திக்கு பாலகர்கள் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று (செவ்வாய்) முதல் வருகிற 2-ந்தேதி வரை காலை மற்றும் மாலை சாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது பின்னர் வருகிற 3-ந்தேதி இரவு 8 மணிக்கு மயில் வாகன பவனி நடைபெறுகிறது. பின்னர் வருகிற 4-ந்தேதி மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு யானை வாகன பவனியும் நடக்கிறது.பின்னர் வருகிற 5-ந்தேதி காலை 6 மணிக்கு விநாயகர், குழந்தை வேலாயுதசாமி வள்ளி-தெய்வானையுடன் தேரோட்டம் நடக்கிறது.

    பின்னர் மாலை 3 மணிக்கு திருத்தேர் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 6-ந்தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகன பவனி நடைபெறுகிறது. பின்னர் வருகிற 7-ந்தேதி காலை 11 மணிக்கு மகாதரிசனம் நடக்கிறது.மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.பின்னர் மாலை 6 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் 8-ந்தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    Next Story
    ×