search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூச திருவிழா மஞ்சள் நீராட்டுதலுடன் நிறைவு
    X

    மஞ்சள் நீராட்டு விழாவையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூச திருவிழா மஞ்சள் நீராட்டுதலுடன் நிறைவு

    • கடந்த சில நாட்களாக சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தெப்பத்தில் சாமி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 4-ந் தேதி காலை சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5-ந் தேதி கீழ் தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும், காலை 5 மணிக்கு மகா தீபாராதனை, சாமி புறப்பாடு நிகழ்ச்சியும், 6:30 மணிக்கு சாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    6-ந் தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும் 7-ந் தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சாமி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம், மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியுடன் தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.

    Next Story
    ×