என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
கார்வேட்டிநகரம் வேணுகோபாலசாமி கோவிலில் தெப்போற்சவம் நாளை தொடங்குகிறது
- வருடாந்திர தெப்போற்சவம் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை நடக்கிறது.
- தெப்போற்சவ விழாவின் 3 நாட்களிலும் வீதி உற்சவம் நடக்கிறது.
சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை நடக்கிறது. தற்போது கோவில் புஷ்கரணியில் புனரமைப்புப் பணி நடப்பதால் தெப்போற்சவம், புஷ்கரணியில் நடக்காமல் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
9-ந்தேதி சீதா, லட்சுமணர், கோதண்டராமசாமி, 10 மற்றும் 11-ந்தேதிகளில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மேற்கண்ட 3 நாட்கள் காலை 9 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை ஸ்பாபன திருமஞ்சனமும், மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வீதி உற்சவமும் நடக்கிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்மபிரசார பரிஷத் சார்பில் ஆன்மிக மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்