search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக் கோப்பை டி20 கேப்டன்: ரோகித் சர்மா முடிவுக்கு காத்திருக்கும் பிசிசிஐ
    X

    உலகக் கோப்பை டி20 கேப்டன்: ரோகித் சர்மா முடிவுக்கு காத்திருக்கும் பிசிசிஐ

    • இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார்.
    • காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பாண்ட்யா விலகியுள்ளார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா விலகிய நிலையில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார். இவர் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் இந்திய டி20 அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.


    இதனிடையே, ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால், அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் வரை ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்பட வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாக கூறப்படுகிறது.

    ஆனால், 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறிய பின்னர், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.

    அவரை மீண்டும் அணிக்கு கொண்டுவர பிசிசிஐ சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ரோகித் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் சூர்யகுமார் கேப்டனாக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.

    Next Story
    ×