search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நல்லவர்களுக்கு நல்லது நடக்கும்.. அவரிடம் தோற்றதில் மகிழ்ச்சி- ஹர்திக் பாண்ட்யா
    X

    நல்லவர்களுக்கு நல்லது நடக்கும்.. அவரிடம் தோற்றதில் மகிழ்ச்சி- ஹர்திக் பாண்ட்யா

    • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
    • நாங்கள் பேட்டிங் செய்த விதம் நிச்சயமாக ஆச்சரியமாக இருந்தது.

    அகமதாபாத்:

    16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது.

    பின்னர் 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்தது. 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    இதை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (26 ரன்), கான்வேவும் (47 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடியான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த ரஹானே (27 ரன்), அம்பத்தி ராயுடு (19 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது.

    கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது.

    இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:-

    நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விதி இதை எழுதியது. நான் தோற்க வேண்டும் என்றால், நான் அவரிடம் (டோனி) தோற்றுவிடுவேன். நல்லவர்களுக்கு நல்லது நடக்கும். எனக்கு தெரிந்த சிறந்த நபர்களில் அவரும் ஒருவர். கடவுள் கருணை காட்டினார். கடவுள் என்னிடமும் கருணை காட்டியுள்ளார். ஆனால் இன்று அவரது இரவு. சென்னை அணி எங்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடியது.

    நாங்கள் பேட்டிங் செய்த விதம் நிச்சயமாக ஆச்சரியமாக இருந்தது. சாய் சுதர்சன் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. நான் அவரை வாழ்த்துகிறேன். அவர் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்யப் போகிறார். எங்கள் வீரர்கள் சீசன் முழுவதும் விளையாடிய விதம் உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. தொடர்ந்து போராடினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×