சிறந்த ஆட்சியாளரான வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்

சிறந்த ஆட்சியாளரான திரு.வாஜ்பாயின் மறைவு கவலை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #Vajpayee #AtalBihariVajpayee #RIPVajpayee #Rajinikanth
சிறந்த ஆட்சியாளரான வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்
Published on

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்,

முன்னதாக நேற்று முதல் அவரது உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இன்று காலை முதல் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வாஜ்பாய் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. வாஜ்பாயின் மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினி தெரிவித்திருப்பதாவது,

சிறந்த ஆட்சியாளரான திரு.வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது, அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். #Vajpayee #AtalBihariVajpayee #RIPVajpayee #Rajinikanth 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com