தியேட்டர்கள் மூடல் எதிரொலி.... புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால், புதிய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
திரையரங்கம்
திரையரங்கம்
Published on

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 990 திரையரங்குகள் உள்ளன என்றும், இவை அனைத்துமே மூடப்பட்டது என்றும் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் தினமும் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படுகிறது. வருகிற வெள்ளிக்கிழமை ஞான செருக்கு, எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும், சூடு உள்ளிட்ட சில படங்களை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். 

அந்த படங்களை தள்ளிவைத்து உள்ளனர். விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, கார்த்தியின் சுல்தான், அனுஷ்காவின் சைலன்ஸ், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்களின் ரிலீஸ் தள்ளிபோகும் என்று தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com