Partner

Partner

கடன் வாங்கியதால் அவதிப்படும் இளைஞன் குறித்த கதை
Published on
Partner(2.5 / 5)

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஆதி தொழில் தொடங்குவதற்காக கடன் வாங்குகிறார். கடனை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர் கடனை கொடு இல்லை என்றால் உன் தங்கச்சியை திருமணம் செய்து கொடு என்று கண்டீசன் போடுகிறார். இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ஆதி கடனை திரும்ப செலுத்துவதற்காக சென்னைக்கு வேலைக்கு செல்கிறார்.

அப்போது விஞ்ஞானியான பாண்டியராஜனிடம் இருந்து அவரின் கண்டுபிடிப்பை திருடுவதற்காக ஜான் விஜய் வருகிறார். இந்த கடத்தலில் யோகிபாபுவிற்கு ஒரு ஊசி செலுத்தப்படுவதால் அவர் ஹன்சிகா போன்று மாறிவிடுகிறார்.

இறுதியில் யோகிபாபு மீண்டும் பழைய நிலைக்கு வந்தாரா? பாண்டியராஜின் கண்டுபிடிப்பை திருட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ள ஆதி தனது எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். யோகிபாபுவாக மாறும் ஹன்சிகா அவரை போன்று நடிப்பதற்கு முயற்சி செய்து பாராட்டை பெறுகிறார். யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் தனக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

வீடியோக்கள்

பாட்னர்

X

Maalai Malar
www.maalaimalar.com