பிரபல இயக்குனருடன் 2வது முறையாக இணையும் கார்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, மீண்டும் பிரபல இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கார்த்தி
கார்த்தி
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது சுல்தான் திரைப்படம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தை அடுத்து முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இவர்கள் இணையும் படத்தின் முன்னணி பணிகள் தற்போது முழு வீச்சில் நடப்பதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com