'மஞ்சும்மல் பாய்ஸ்' டைரக்டர் மீது இளம்பெண் பாலியல் புகார்

இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் தெற்கு போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.விரைவில் டைரக்டர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
'மஞ்சும்மல் பாய்ஸ்' டைரக்டர் மீது இளம்பெண் பாலியல் புகார்
Published on

கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த 2022-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சினிமா 'மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்த படத்தை இயக்கியவர் சிதம்பரம். படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமான இவர் மீது இளம்பெண் பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள எலம்குளம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் தெற்கு போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். டைரக்டர் சிதம்பரம், தனது பிளாட்டில் புகுந்து பாலியல் நோக்கத்துடன் தவறாக நடந்து கொண்டதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் டைரக்டர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.சி. பிரிவு 74 மற்றும் 75-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் டைரக்டர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றும் எர்ணாகுளம் தெற்கு போலீசார் தெரிவித்தனர். தேவைப்பட்டால் கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com