/* STAGING CODE */

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி-ரியா ஷிபு!

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில், பிரமாதமான காட்சிகளுடன் தயாரித்து வருகிறது.
Vijay Sethupathi-Kiruthiga Udhayanidhi's directorial
Published on

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அடுத்தடுத்து பிரம்மாண்ட திரைப்படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் செம பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது, பிரபல இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து பிரத்யேகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திரைப்படத்தில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ஒட்டுமொத்த இணையதளவாசிகளின் மனங்களையும் கவர்ந்த 'டெலுலு' புகழ் 'ரியா ஷிபு' Riya Shibu விஜய் சேதுபதியுடன் இணைந்து முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கிருத்திகா உதயநிதி இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மிக ரகசியமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்த முதற்கட்டப் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

உறவுகளுக்குள் இருக்கும் சிக்கலான உணர்வுகளையும், காதலையும் தனது பாணியில் நேர்த்தியாகக் கையாளும் கிருத்திகா உதயநிதி, இம்முறையும் உணர்வுப்பூர்வமான ஒரு எண்டர்டெய்னர் கதையை கையில் எடுத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில், பிரமாதமான காட்சிகளுடன் தயாரித்து வருகிறது.

கிருத்திகா உதயநிதி படத்தின் ஒரு வார காலப் படப்பிடிப்பை முடித்த கையோடு, விஜய் சேதுபதி தனது அடுத்த பிரம்மாண்ட மைல்கல்லான இயக்குநர் சிகரம் மணிரத்னத்தின் புதிய திரைப்படத்தில் இணையவுள்ளார்.

மணிரத்னம், விஜய் சேதுபதி, சாய் பல்லவி கூட்டணியில் உருவாகும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இதன் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் 20 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிருத்திகா உதயநிதி படம், அதைத் தொடர்ந்து மணிரத்னம் படம் என விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த புராஜெக்ட்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com