

மூத்த நடிகர் பரத் கபூர், மாரடைப்பு காரணமாக தனது 80வது வயதில் காலமானார். மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனையில் பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் அவர் தனது இறுதி மூச்சை விட்டார். இதே நாள் மாலையில், மருத்துவமனைக்கு அருகிலுள்ள சுடுகாட்டில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றன.
கடந்த மூன்று நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பரத் குமார் முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் பிரார்த்தனை கூட்டம், ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 7 மணி வரை வடக்கு பம்பாய் சங்கத்தில் (பஞ்சாப் சங்கம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குநர் அசோக் பண்டிட், பரத் கபூரின் மறைவுக்குத் தனது இரங்கலை வெளிப்படுத்தி, இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான அஞ்சலியை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர், "மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் பரத் கபூர் ஜியின் மறைவு செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன். எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் அவருடன் பணியாற்றிய சிறந்த நினைவுகள் உள்ளன. ஒரு சிறந்த மனிதர். ஓம் சாந்தி," என்று குறிப்பிட்டுள்ளார்.