கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த விஜய் சேதுபதி படக்குழு

இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Published on

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இப்படத்தில் கன்னிகை என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரித்விகாவும் ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கருபழனியப்பனும் மதுரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஜெசியும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் போஸ்டர்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com