search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆஸ்கர் தம்பதி பொம்மன் -பெள்ளியை சந்தித்த பிரதமர் மோடி
    X

    நரேந்திர மோடி -பொம்மன் -பெள்ளி

    ஆஸ்கர் தம்பதி பொம்மன் -பெள்ளியை சந்தித்த பிரதமர் மோடி

    • 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.
    • பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை பிரதமர் மோடி சந்தித்தார்.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.


    யானைகளை பார்வையிட்ட பிரதமர் மோடி

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நீலகிரி தெப்பக்காடு பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து ஆவண குறும்படத்தில் நடித்த யானையையும் பார்வையிட்டார்

    Next Story
    ×