என் மலர்

    சினிமா செய்திகள்

    பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று மயில்சாமி உடலுக்கு இறுதி அஞ்சலி
    X

    மயில்சாமி

    பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று மயில்சாமி உடலுக்கு இறுதி அஞ்சலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாரடைப்பு காரணமாக உயிரிழந்த மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • இவரது உடல் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்ட மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.


    இந்நிலையில் சாலிகிராமம் இல்லத்தில் இருந்து வடபழனி மின்மயானத்திற்கு நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சிவபக்தரான மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர். இன்னும் சற்று நேரத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

    Next Story
    ×