குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் - எம்.எஸ்.பாஸ்கர்

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்
Published on

ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு கடலோர பகுதியில் மீனவர்கள் கடல் பாசி எடுக்க செல்வது வழக்கம். மீனவ பெண் ஒருவர் கடல் பாசி எடுக்க சென்ற போது கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த செயலானது அப்பகுதியில் உள்ள இறால் கம்பெனியில் வேலை செய்யும் வட இந்தியர்களால் தான் நடந்துள்ளது என்று கூறப்படும் நிலையில் போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்திற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

எம்.எஸ்.பாஸ்கர்

இந்நிலையில் பிரபல குணசித்தர மற்றும் நகைச்சுவை நடிகருமான எம்.எஸ்.பாஸ்கர் இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் சமுக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அவர் கூறுகையில், “போனில் ஏமாற்றுவது.. வங்கிக்கொள்ளை, எடிஎம் இயந்திரத்தை உடைப்பது, கற்பழிப்பு, கொலை போன்ற சகல குற்றங்களிலும் வட இந்தியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீர விசாரித்து குற்றவாளிகள் யாராயினும், எத்தனை பேராயினும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com