புதிய ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள 'அலங்கு'

எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அலங்கு’.இந்த படத்தில் குணாநிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.
புதிய ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள 'அலங்கு'
Published on

உறுமீன் , பயணிகள் கவனிக்கவும் படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'அலங்கு'. இந்த படத்தில் குணாநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, சவுந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டி.சபரிஷ் , எஸ்.ஏ. சங்கமித்ரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜீஷ் இசையமைக்க எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.

'அலங்கு' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கேரள மாநிலம் இடுக்கி, அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம் , கோவை மாவட்டம் ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படக்குழு நடத்தி முடித்துள்ளனர். முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தில் அதிக அளவில் வன விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்ததும் இப்படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com