search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சினேகன் அறக்கட்டளையின் பெயரில் மோசடி- நடிகை ஜெயலட்சுமீ மீது வழக்குப் பதிவு
    X

    ஜெயலட்சுமி - சினேகன்

    சினேகன் அறக்கட்டளையின் பெயரில் மோசடி- நடிகை ஜெயலட்சுமீ மீது வழக்குப் பதிவு

    • சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது சினேகன் பணமோசடி புகார் மனு அளித்தார்.
    • சினேகன் அறக்கட்டளை பெயரில் பணமோசடி விவகாரத்தில் நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

    ஜெயலட்சுமி - சினேகன்

    இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்தார். இந்நிலையில், சினேகன் அளித்த புகாரின்பேரில் சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×