Death Threat | நெத்தியில் புல்லட் இறக்கிடுவோம்! - பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் மிரட்டல்

Death Threat | நெத்தியில் புல்லட் இறக்கிடுவோம்! - பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் மிரட்டல்
Published on
Summary

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துதுள்ளது.

இந்திய அளவில் புகழ் பெற்ற ராப் பாடகர் பாட்ஷா. இவரது சமீபத்திய பாடல் "ததீரி" வெளியாகி வரவேற்புக்கு இணையான சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது. இந்தப் பாடல் தொடர்பான சர்ச்சையில் இவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், 'ததீரி' பாடலில் பெண்கள் மற்றும் சிறார்களைப் பற்றி ஆட்சேபனைக்குரிய பாடல் வரிகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து, பாடகர்-ராப்பர் பாட்ஷாவுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துதுள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் உறுப்பினர்கள், பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், பாட்ஷாவை "அவரது நெற்றியில் சுடுவதாக" மிரட்டினர். "பாடகர் பாட்ஷா, நீங்கள் ஹரியானாவின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சித்தீர்கள். 2024-இல் உங்கள் கிளப்பில் டிரெய்லரை உங்களுக்குக் காட்டினோம்; அடுத்த முறை நாங்கள் உங்கள் நெற்றியில் நேரடியாகச் சுடுவோம்" என்று கூறப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள ஒரு கிளப்பிற்கு வெளியே, பாடகரும் ராப்பருமான பாட்ஷாவுக்குச் சொந்தமான செவில்லே பார் மற்றும் லவுஞ்சில் ஒரு வெடி விப்த்து ஏற்பட்டது - இதற்கு லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புடைய கனடாவைச் சேர்ந்த பயங்கரவாதி கோல்டி பிரார் பொறுப்பேற்றிருந்தார்.

பாத்ஷாவின் சமீபத்திய ஹரியான்வி பாடல் `ததீரி' (Tateeree) தொடர்பாகக் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார்; இந்தப் பாடலில் ஆட்சேபனைக்குரிய வரிகளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பஞ்ச்குலாவைச் சேர்ந்த ஒரு நபர் அளித்த புகாரின் அடிப்படையில், பாத்ஷா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் பாட்ஷாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு, இணையத்தில் வெகுவாகப் பரவியது. கடந்த வாரம், இந்தப் பாடலின் மூலம் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று கூறி, பாட்ஷா மன்னிப்பு கோரினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com