

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கருப்பு. பல முறை இந்தப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தத் திரைப்படம் இன்று (மே 14) உலகமெங்கும் வெளியாகிறது. தமிழ் நாட்டில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சிக்கு (காலை 9 மணி) அரசிடம் அனுமதி பெறப்பட்டு இருந்தது.
ரிலீசுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பக்கப்படும் நிலையில், சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டு இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, " தவிர்க்க முடியாத காரணங்களால் கருப்பு திரைப்படத்தின் 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என குறிப்பிட்டுள்ளார்.