

துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக "துரந்தர்: தி ரிவெஞ்ச்" (Dhurandhar: The Revenge) திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியானது. இந்தப் படம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவிலேயே பல கோடிகளை ஈட்டியிருந்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், "துரந்தர் தி ரிவெஞ்ச்" திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.241-க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், துரந்தர் 2 திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ஒரு கட்சி சார்பான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி முறையீடு
மனுவாக தாக்கல் செய்த பின்னா் முறையீடு செய்யுமாறு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு அறிவுறுத்தி உள்ளார்.