

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றப் படம் த்ரிஷ்யம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.
அதுவும் வெற்றிப் பெற்றநிலையில் தற்போது மூன்றாம் பாகம், த்ரிஷ்யம் -3 உருவாகி உள்ளது.
முந்தைய பாகங்களைத் தொடர்ந்து, ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையில் நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்களை இப்படம் விவரிக்கிறது.
இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் முந்தைய பாகங்களில் நடித்த அதே கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 21 ஆம் தேதி வெளியானது.
வெளியான முதல் நாளில் பாக்ஸ் ஆபிசில் இப்படம் ரூ 50.35 கோடி வசூலித்தது. இந்நிலையில் படம் 58 மணி நேரத்தில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘எம்புரான்’ படத்தை தொடர்ந்து மிக வேகமாக ரூ. 100 கோடி வசூலைப் பெற்ற படமாக ‘த்ரிஷ்யம் 3’ மாறியுள்ளது.
இந்தாண்டின் அதிகம் வசூலிக்கும் மலையாளப் படம் பட்டியலில் இடம்பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
த்ரிஷ்யம் 3 டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.