வடசென்னை 2-வில் தனுஷ்-சிம்புவை இணைக்க வெற்றிமாறன் அதிரடி முயற்சி!

தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு மாபெரும் 'எபிக்' தருணமாக அமையும்.
Dhanush and Simbu together in Vada Chennai 2
Published on

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'வடசென்னை 2' திரைப்படம் குறித்து தற்போது ஒரு மாஸான தகவல் வெளியாகி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன், தனது 'வடசென்னை' திரைப்பட பிரபஞ்சத்தை விரிவுபடுத்தும் நோக்கில், நடிகர் தனுஷ் மற்றும் சிலம்பரசன் டி.ஆர். ஆகிய இருவரையும் ஒரே திரையில் கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படத்தில் 'அன்பு' கதாபாத்திரம் எவ்வளவு பிரபலமோ, அதேபோல வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 'வடசென்னை 2' கதையின்படி தனுஷின் அன்பு கதாபாத்திரமும், சிம்புவின் அரசன் கதாபாத்திரமும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான ஒரு வலிமையான சூழல் திரைக்கதையில் உள்ளதாம். இந்த மாஸான தருணத்தை அப்படியே திரையில் கொண்டு வர இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இரு முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்து நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில், வெற்றிமாறனின் வெறித்தனமான ராவான உலகத்தில் இவர்களின் கதாபாத்திரங்கள் மோதிக்கொண்டால் அது தியேட்டர்களில் திருவிழா போன்ற கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கதையின்படி இந்த இரு பெரும் கதாபாத்திரங்களும் சந்திக்கும் அந்த ஒரு குறிப்பிட்ட காட்சி மட்டும் நிஜமானால், அது தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு மாபெரும் 'எபிக்' தருணமாக அமையும் என சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இந்த செய்தியை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com