நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண்பார்வை அறுவை சிகிச்சை

கண்பார்வை அறுவை சிகிச்சைக்கு பின்பு, தனது குடும்பத்துடன் அக்‌ஷய் குமார் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்
நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண்பார்வை அறுவை சிகிச்சை
Published on

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங் இஸ் கிங் என்ற படத்தை இயக்கிய அனீஸ் பாஸ்மி இயக்குநருடன், பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகர் அக்‌ஷய் குமார் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் கதா நாயகிகளாக வித்யா பாலன் மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ள நிலையில், கேரளாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து கேரளாவில் இருந்து கிளம்பியுள்ள அக்‌ஷய் குமார், சிறிய அளவிலான கண்பார்வை அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு, இரண்டு முதல் மூன்று வாரங்கள் தனது குடும்பத்துடன் சேர்ந்து நேரத்தை செலவிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com