

காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும் வாரம்.லாப ஸ்தானத்தில் குரு சுக்ரன் சேர்க்கை உள்ளது. இது கன்னி ராசிக்கு பொற்காலம் என்று கூறும் வகையில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காலமாகும். புதிய முன்னேற்றம் உண்டாகும். உடலில் புத்தொளியும், பொலிவும் உண்டாகும். கட்டுப்பாடற்ற சுக வாழ்க்கை கிடைக்கும். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும்.தன வரவு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம், நல்ல உத்தியோகம், வீடு, வாகனம், திருமணம், புத்திரப்பேறு, பொருளாதார முன்னேற்றம் என உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். போட்டி பொறாமை குறையும். கடன் பிரச்சனைகள் தீரும். அரசியல் வெற்றி, அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பிறருக்கு கட்டளையிடும் பெரிய பதவிகள் தேடி வரும். உயர் கல்வி பயில்பவர்கள் வெற்றி பெறுவார்கள். கோபத்தை குறைத்து நம்பிக்கையோடு முயற்சித்தால் காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும். தினமும் கற்பக விநாயகரை வழிபடவும்.