இந்த வார ராசிப்பலன்

Published on

சகல நன்மைகளும் அடையக் கூடிய காலம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திறமை, செல்வாக்கு, புகழ் ஆகியவை கூடும். பணவரவு உயரும். முகப் பொலிவு, ஆரோக்கியம் கூடும். 2,5-ம் அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுவதால் கடந்த கால சிந்தனைகளை விட எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் அதிகமாகும்.

பொன்னையும், பொருளையும் விட புகழ், பதவி மீது அதிக ஆசை இருக்கும். சிலருக்கு ராணுவம், போலீஸ், சட்டம், அரசியல் போன்றவற்றில் உயர் பதவிகள் கிடைக்கும்.சமூகத்தில் தனி மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். எதிரிகளின் பலம், பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

வியாபாரம் தொழில் வெற்றி நடைபோடும். சிலர் கடல் கடந்து சென்று பொருளீட்டலாம். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரப் பேறு கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். மன இறுக்கம் குறையும். அமாவாசையன்று பசுவிற்கு இயன்ற தானம் தரவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com