வார ராசிபலன் 15.3.2026 முதல் 21.3.2026 வரை

Published on

துலாம்

நன்மைகள் நடக்கும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரம் நிவர்த்தி அடைந்ததால் தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் வந்து சேரும். எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ், கவுரவம் யாவும் உயரும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும்.

பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தைகளை பெற்றெடுக்கும் யோகம் உண்டாகும். வராக்கடன்கள் வசூலாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. கடந்தகால வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் சுபச் செலவு ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினை இனி இல்லை. அமாவாசை அன்று சுமங்கலி பெண்களுக்கு இயன்ற தான தர்மம் வழங்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com