search icon
என் மலர்tooltip icon

    மேஷம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

    மேஷம்

    சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

    பதினோராம் இடத்தில் சனி! பணவரவு தான் இனி!

    சனியின் வக்ர காலம்!

    19.6.2024 முதல் 4.11.2024 வரை, 2.7.2025 முதல் 18.11.2025 வரை இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்குஅதிபதி வக்ரம் பெறுவதால் உத்தியோகம், தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

    ஒருவரையும் நம்பி செயல்பட முடியாது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டிய நேரமிது. வீண்பழிஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் இருப்பதோடு தெய்வ நம்பிக்கையும் இருந்தால் அவை கைகொடுத்து உதவும். பிறருக்குப் பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படும் நேரமிது.

    மேஷ ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் 20.12.2023 அன்று 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், இப்பொழுது லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப்போவது யோகம்தான். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் வரும்.

    லாபச் சனியின் ஆதிக்கம்!

    டிசம்பர் 20-ந் தேதி முதல், உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். அந்த இடம் லாப ஸ்தானம் என்று சொல்லப்படுவதால் இதுவரை எவ்வளவு முயற்சி செய்தும் முடிவடையாத தொழில் தொடர்புகள், உத்தியோக முன்னேற்றங்கள் இப்பொழுது முடிவடைந்து சந்தோஷத்தை வழங்கும். கூட்டுத் தொழிலில் இருந்து விலகி சுய தொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

    சனியின் பார்வைப் பலன்கள்!

    உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 5, 8 ஆகிய இடங்களையும் பார்க்கப்போகின்றார். உடல்நலம், குடும்பம், புகழ், ஆரோக்கியம், பூர்வ புண்ணியம், பிள்ளைகள், பூர்வீக சொத்துக்கள், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ளும் விதத்தில் சனி பகவான் பார்வை பதிவதால் அதற்குரிய பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். செல்வாக்கு மேலோங்கும். இடமாற்றம் இனிமை தரும் விதத்தில் அமையும்.

    சனியின் பார்வை 5-ல் பதிவதால் பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் மற்றும் பெற்றோரின் மணி விழா, முத்து விழா, பவள விழா போன்ற விழாக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கைகூடிவரும்.

    இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பாராத விதத்தில் வந்து மனதை மகிழ்விக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படாமல் கலகலப்பாக இருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம்.

    சனியின் பாதசாரப் பலன்கள்

    செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) உங்கள் ராசிநாதன் காலில் சனி உலா வருவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களால் சில இடையூறுகள் ஏற்பட்டு அகலும். தொழில் பங்குதாரர்கள் விலகிக் கொள்வதாகச் சொல்லிப் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

    `உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். தைரியகாரகன் செவ்வாய் உங்கள் ராசிநாதனாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. ஆயினும் இதுபோன்ற காலங்களில் மனக்கலக்கம் கொஞ்சம் அதிகரிக்கத்தான் செய்யும்.

    ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். திட்டமிட்ட பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். திடீர் முன்னேற்றம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தற்காலிகப் பணி, நிரந்தரப் பணியாக மாறும். வர்த்தகம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வரன்கள் வாசல் தேடி வரும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர்.

    குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

    வருமானம் திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைப் பாதையில் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் தானாக வந்து சேரும். நிலம், பூமி வாங்குவதில் முதலீடு செய்வீர்கள். எதிரிகள் விலகுவர். நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும். விருப்ப ஓய்வில் வெளிவந்தவர்கள் சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    குருப்பெயர்ச்சிக் காலம்

    சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கும் குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது விரயத்திற்கேற்ற லாபம் வந்து சேரும். வீடு மாற்றம், இடமாற்றம் உருவாகலாம்.

    தொழிலில் அதிக கவனம் செலுத்தவேண்டிய நேரமிது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இரண்டில் குரு வரும்பொழுது திடீரெனச் செல்வம் வரும் என்பார்கள். ஆனால் விரயாதிபதியாக குரு விளங்குவதால் வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாகவே இருக்கும்.

    மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதர வர்க்கத்தினர்களுடன் இருந்த பகைமை நிலை மாறும். அதே நேரத்தில் தொழிலில் அதிக முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம்.

    கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது தாய் வழி ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அதிக உழைப்பும், அதற்கேற்ற வருமானமும் உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வரலாம்.

    ராகு - கேது பெயர்ச்சிக் காலம்

    26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக லாப ஸ்தானம் புனிதமடைவதால் வரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட எடுத்த முயற்சி கைகூடும். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு கேது வருவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். முன்னோர்கள் கட்டி சிதிலமடைந்த கோவில்களைப் புதுப்பித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.

    வெற்றி பெற வைக்கும் வழிபாடு

    சனிக்கிழமை தோறும் விரதம்இருந்து சனி பகவானை வழிபடுவதோடு, அருகம்புல் மாலை சூட்டி ஆனைமுகப்பெருமானையும் வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வழிபாடு காரிய வெற்றிக்கு கைகொடுக்கும்.

    மேஷம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    வீரமான மேஷ ராசியினரே இதுவரை ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சனிபகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். தனது 3ம் பார்வையால் ராசியையும் 7-ம் பார்வையால் 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 10-ம் பார்வையால் 8-ம்மிடமான ஆயுள், வம்பு, வழக்கு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

    சுப லாபச் சனியின் பலன்கள்: ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய காலம் கோச்சாரத்தில் உப ஜெய ஸ்தானமான 3,6,11-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் காலம். இப்பொழுது அந்த பொற்காலம் மேஷ ராசிக்கு ஆரம்பமாகி விட்டது. கருத்து வேறுபாட்டால் பேசாமல் பிரிந்து இருந்த சித்தப்பா, மூத்த சகோதரம் பகைமை மறந்து நட்பு பாராட்டுவார்கள். தொழில் ரீதியாக உறவுகள் ரீதியாகவும் அனுபவித்த மன சங்கடங்கள் விலகும்.

    இந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மகாலஷ்மியின் கனிவுப் பார்வை உங்கள் மேல் உள்ளதால் சனி பகவான் தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி லாபத்தில் திளைக்க செய்யப் போகிறார். பொருளாதார நிலையில் மிக உன்னதமான நிலையை அடைவீர்கள்.கடனால் பட்ட கவலைகள், அவமானம் அகலும்.பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது மேன்மையான காலம். அதிகாரப் பதவிகள் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சொந்த தொழில் ஆரம்பிக்க விருப்புபவர்களுக்கு விரும்பிய தொழில் வாய்ப்பு தேடி வரும்.

    புதிய தொழில் துவங்க, தொழில் கிளைகள் திறக்க, தொழிலை விரிவு செய்ய ஏற்ற நேரம். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அரசின் திட்டங்கள், மானியம், உதவி தொகை கிடைக்கும். தொழிலாளர்கள் நட்பு கரம் நீட்டி உற்பத்தியை பெருக்குவார்கள். தொழில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். புதிய தொழில் கூட்டாளிகள் , ஒப்பந்ததாரர்கள் கிடைப்பார்கள்.வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். இது மிகப் பொன்னான காலம். முன்பு ஏற்பட்ட நஷ்டங்கள் இப்பொழுது பணமாக காய்க்கும்.உயர்கல்வி, மருத்துகல்விகள், ஆராய்ச்சி சார்ந்த கல்விகள் IAS, IPS, PHD போன்ற கல்வி பயில சிறப்பான காலம்.

    3-ம் பார்வை பலன்கள்: லாபஸ்தானத்தில் நிற்கும் சனியின் 3ம் பார்வை ராசிக்கு இருக்கிறது. இளைய சகோதர வழியில் பொருள் உதவி வந்து சேரும். சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நல்லிணக்கம் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும். அதிக அலைச்சல் மிகுந்த பயணங்கள் செய்ய நேரும். சிலர் தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயரலாம்.கை மறதியாக வைத்த நகைகள், சொத்து பத்திரங்கள் கிடைக்கும். எல்லைத் தகராறு நீங்கும், பாகப்பிரிவினை சுமூகமாகும். சிலருக்கு தலைவலி, ஞாபக மறதி அல்லது காது, மூக்கு தொண்டை, நரம்பு தொடர்பான பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு மந்த தன்மையோடு எதிர்மறை சிந்தனையும் தோன்றி மறையும். ஆனாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம்.சிலருக்கு தகவல் தொடர்பு மீடியா மூலம் பெயர் புகழ் பரவலாம்.

    7-ம் பார்வை பலன்: சனியின் 7-ம் பார்வை ராசிக்கு 5-ம் இடமான பதவி ஸ்தானம், புத்தி ஸ்தானம் , பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்தி கூர்மை , தெய்வ அனுகிரகம் பற்றி கூறும் இடத்தில் பதிகிறது. இந்த இடத்திற்கு ஏப்ரல், 22, 2023 முதல் ஒரு வருட காலத்திற்கு குருப் பார்வையும் இருப்பதால் கவுரவ பதவிகள் தேடி வரும்.குல, இஷ்ட, தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குடும்பத்திற்கு குல தெய்வ அருள் கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும்.நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் தலை தூக்கினாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகும். குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    குழந்தைகளுக்கு திருமணம், கல்வி, புத்திரப் பேறு, உத்தியோகம், தொழில் போன்ற சுப பலன்கள் அதிகரிக்கும். அதற்கான சுப விரயங்களும் உண்டாகும். சிறு சிறு உட்பூசலுக்காக வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

    10ம் பார்வை பலன்கள்: சனியின் 10ம் பார்வை அஷ்டம ஸ்தானத்திற்கு இருப்பதால்மறைமுக வழிகளில் இலாபங்கள் பெருகி உங்களைத் திக்கு முக்காடச் செய்யும். இன்சூரன்ஸ், ஏலச்சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை, லாட்டரி, ரேஸ், திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து கைக்கு கிடைக்கும்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும்.

    வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிட்டும். சிலருக்கு சிறிய முயற்சியில் கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். ஆயுள் தீர்க்கம். ஆனால் முன்னோர் வழி கர்ம வினை தாக்க நோய் ஆரம்பமாகும் அல்லது அதிகமாகும். உடல் அசதி உருவாகும்.

    சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை:

    ராசி அதிபதி மற்றும் அஷ்டமாதிபதியாகிய செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலம். ராசிக்கும், எட்டாம் இடத்திற்கும் சனிப் பார்வை உள்ளது என்பதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை , ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. வரவு இல்லாமல் இருந்தால் இருந்தால் கூட பரவாயில்லை. முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை. பிறருக்கு ஜாமீன் போட்டால் கடன் தொகைக்கு நீங்களே பொறுப்பு ஏற்க நேரும். உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்களே நெருக்கமானவர்களே முதுகில் குத்தும் நேரம் என்பதால் உறவினர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது.

    சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள்: 14.3.2023 முதல் 6.4.2024 வரை:

    சதயம் ராகுவின் நட்சத்திரம். அக்டோபர் வரை ராசியிலும் அதன் பிறகு ராசிக்கு 12ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகும் ராகுவின் நட்சத்திரத்திலும் கோட்சார சனி சஞ்சரிப்பதால் இச் சமயங்களில் சுப விரயச் செலவுகளான திருமணம், வீடு கட்டுதல், வாகன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளுதல், நகை வாங்குதல், புதிய முதலீடு செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    சிறு பிரச்சனைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள்.தலைமறைவாக வாழ்ந்தவர்கள், காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். வெளிநாட்டு குடியுரிமை சாத்தியமாகும். பதவி உயர்வு கிடைத்து பொறுப்புகள் அதிகரிக்கும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தாய் மாமன் அனுசரணையால் பூர்வீகம் தொடர்பான பல பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகும். தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும்.

    17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் உங்களின் நீண்ட நாள் பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் உங்களை தேடி வரும்.வேலையாட்களால் செலவும், பிரச்சனையும் தோன்றும். தொழிலில் இதுவரை ஜாதகர் காட்டி வந்த வீரம், வேகம், விவேகம் மட்டுப்படும். சிந்தனை தடுமாற்றம் , மன சஞ்சலம் அதிகமாகும்.

    பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை:

    ராசிக்கு 9,12ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில்தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தை சரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம். புனித நீராடல், புனித தல யாத்திரை சென்று வர வாய்ப்பு கிடைக்கும். இஷ்ட , குல, உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். சிலருக்கு சொந்த கோவில் கட்டும் அமைப்பும் உண்டாகும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு உங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.

    30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள் ,ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும். கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப்பெறுவீர்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம். தந்தையின் ஆரோக்ய குறைவு உங்களை கவலையில் ஆழ்த்தும்.

    திருமணம்: திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். கடந்த சில வருடங்களாக கோட்சார ராகு கேதுவினால் தடைபட்ட திருமணம் ஏப்ரல் மாதத்திற்கு மேல் நடைபெறும். பொருத்தமான ஜாதகம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். முதல் திருமணத்தில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு அடுத்த இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும். இது வரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள்.

    பெண்கள்: பெண்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். உங்களிடம் விரோதமாக இருந்தவர்கள் கூட அன்பாக பேசுவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த அனைத்து சிக்கலும் தீரும். குடும்பத்துடன் உல்லாசமாக சுற்றுலா சென்று வருவீர்கள். விரும்பிய நகை, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் தாமதம் உள்ள தம்பதியினர் உரிய மருத்துவம் செய்ய குழந்தை பாக்கியம் கிடைக்கும் .

    பரிகாரம்: ஆக மொத்தம் இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் கிணற்றில் விழுந்த கல்லாக இருந்த அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். மேலும் சாதகமான பலன்கள் அதிகரிக்க சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும். மேஷ ராசியினர் செவ்வாயின் அதி தேவதை முருகப் பெருமானை செவ்வாய் கிழமை அரளிப் பூ மாலை அணிவித்து வழிபட தடை தாமதங்கள் விலகி முன்னேற்றமான பலன் உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள்

    ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

    மகரத்தில் வருகிறது சனி மகத்தான பலன் கிடைக்கும் இனி!

    மேஷ ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப்போவது யோகம்தான். இதனால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனியும் சேருவதால் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுகின்றது. எனவே சனியால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்க, குருவின் அனுகூலமும் கைகொடுக்கும்.

    தொழிலில் பணவரவு கூடும்

    டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுக்கும் ஆற்றல் சனி பகவானுக்கு உண்டு. எனவே தொழிலில் லாபத்தை அள்ளிக்கொடுப்பர். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.

    சனியின் பார்வை பலன்கள்

    உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 4, 7, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி பூமி, சுகம், தாய், கல்வி, வியாபாரம், களத்திரம், பயணம், விரயம் ஆகியவற்றைக் குறிக்கும் 4-ம் இடத்தில், சனியின் பார்வை பதிவதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடிவரும். ஏற்கனவே பேசி கைவிடப்பட்ட வரன்கள், மீண்டும் தேடிவரலாம். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களோடு மனம் விட்டுப் பேசி சில பிரச்சினைகளுக்கு நல்ல முடிவெடுப்பீர்கள். சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங் கள் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம்.

    சனியின் பாதசாரப் பலன்கள்

    27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும். சூரியன் 5-ம் இடத்திற்கு அதிபதியானவர். அவரது சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பொதுவாழ்வில் புகழ்கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சந்திரன். எனவே இக்காலத்தில் இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு.

    27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் போது, ராசிநாதன் காலில் சனி உலா வருவதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

    குருப்பெயர்ச்சிக் காலம்

    சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். லாபமும் கிடைக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். உறவினர்கள் பகை உருவாகலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ஜென்ம குருவாக வருவதால் இடமாற்றங்களும், ஊர்மாற்றங்களும் ஏற்படலாம்.

    ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

    21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சியாகும்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அதன்படி உங்கள் ராசிக்கு, ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் வருவதால் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை. வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அந்த நேரத்தில் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள்.

    வெற்றிக்குரிய வழிபாடு

    சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்குரிய 'கருநிறக் காகம் ஏறி..' என்ற சனி கவசப் பாடலைப் பாடி வழிபடுங்கள். அதோடு ஆதியந்தப் பிரபு படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து அருகம்புல் மாலையும், வெற்றிலை மாலையும் அணிவித்து வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    மேஷம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள்: மகரத்தில் வருகிறது சனி மகத்தான பலன் கிடைக்கும் இனி!!

    ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

    மகரத்தில் வருகிறது சனி மகத்தான பலன் கிடைக்கும் இனி!

    மேஷ ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப்போவது யோகம்தான். இதனால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனியும் சேருவதால் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுகின்றது. எனவே சனியால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்க, குருவின் அனுகூலமும் கைகொடுக்கும்.

    தொழிலில் பணவரவு கூடும்

    டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுக்கும் ஆற்றல் சனி பகவானுக்கு உண்டு. எனவே தொழிலில் லாபத்தை அள்ளிக்கொடுப்பர். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.

    சனியின் பார்வை பலன்கள்

    உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 4, 7, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி பூமி, சுகம், தாய், கல்வி, வியாபாரம், களத்திரம், பயணம், விரயம் ஆகியவற்றைக் குறிக்கும் 4-ம் இடத்தில், சனியின் பார்வை பதிவதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடிவரும். ஏற்கனவே பேசி கைவிடப்பட்ட வரன்கள், மீண்டும் தேடிவரலாம். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களோடு மனம் விட்டுப் பேசி சில பிரச்சினைகளுக்கு நல்ல முடிவெடுப்பீர்கள். சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங் கள் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம்.

    சனியின் பாதசாரப் பலன்கள்

    27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும். சூரியன் 5-ம் இடத்திற்கு அதிபதியானவர். அவரது சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பொதுவாழ்வில் புகழ்கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சந்திரன். எனவே இக்காலத்தில் இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு.

    27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் போது, ராசிநாதன் காலில் சனி உலா வருவதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

    குருப்பெயர்ச்சிக் காலம்

    சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். லாபமும் கிடைக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். உறவினர்கள் பகை உருவாகலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ஜென்ம குருவாக வருவதால் இடமாற்றங்களும், ஊர்மாற்றங்களும் ஏற்படலாம்.

    ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

    21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சியாகும்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அதன்படி உங்கள் ராசிக்கு, ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் வருவதால் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை. வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அந்த நேரத்தில் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள்.

    வெற்றிக்குரிய வழிபாடு

    சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்குரிய 'கருநிறக் காகம் ஏறி..' என்ற சனி கவசப் பாடலைப் பாடி வழிபடுங்கள். அதோடு ஆதியந்தப் பிரபு படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து அருகம்புல் மாலையும், வெற்றிலை மாலையும் அணிவித்து வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    ×