2026 பங்குனி மாத ராசிபலன்

Published on

செல்வாக்கை விரும்பும் மேஷ ராசியினரே

உங்களின் ராசி அதிபதி செவ்வாய் பங்குனி 19 வரை 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். அதன் பிறகு 12ம்மிடமான விரய ஸ்தானம் செல்வார். உங்களின் திட்டமிடுதல் மற்றும் செயல்படும் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் நல்ல சாதனை படைக்கலாம். இது சுப விரயமா? அல்லது அசுப விரயமா? என்பது உங்களுடைய சுயசாதக ரீதியான தசா புத்தியே முடிவு செய்யும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் முதலீடுகளை அதிகரிக்க முடியும்.

சேமிப்பு, சிக்கனத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதம். சிலருக்கு தனிமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். மனம் எளிமையை விரும்பும். உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஓடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனதடுமாற்றம் ஏற்படும். யாரை நம்புவது எந்த காரியத்தை செய்வது எதில் லாபம் வரும் என்ற நிதானமற்ற நிலை நீடிக்கும். சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். அதனால் மனச் சோர்வு மிகும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். கடந்த வந்த நாட்களில் நடந்த எதிர்மறையான சம்பவங்களை மனிதில் இருந்து விலக்க வேண்டும். நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். தூக்கம் குறையும். பயணங்களால் சில அசௌகரியங்கள் உண்டாகும்.

ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டும். கண், கை கால் மூட்டு வலி போன்றவற்றிற்கு சிகிச்சை செய்ய வேண்டிய நேரம் உள்ளது. வரவிற்கு ஏற்ற செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்ய அதிக சிரமத்தை சந்திப்பார்கள். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு போதிய நீராதாரம் இன்மையால் அவஸ்த்தையாக இருக்கும். விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காது. அரசின் உதவிகள் காலதாமதமாக வந்து சேரும். குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டக் குறைவு, மெத்தனப் போக்கும் நிலவும். சோம்பலும் மறதியும் மிகுதியாகும். சொந்த வீடு, வாகனம் வாங்க விரும்புபவர்கள் சுய ஜாதகத்தை பரிசோதித்து சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடவும்.

ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் மேஷ ராசியினர் வாழ்வில் செட்டில் ஆகுவதற்கும் நல் வழி கிடைக்கும். ஜனன கால ஜாதக ரீதியான பல்வேறு தோஷங்களால் திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல வரன் வரும். திருமணத் தடை அகலும். முதல் திருமணத்தில் மன நிம்மதி இழந்து அல்லாடுபவர்கள் தற்போது முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும். சுய ஜாதகத்தில் 7,8ம் பாவகங்களில் பிரச்சனை இருந்து திருமணத் தடை இருந்தால் அதற்கு உரிய பரிகார வழிபாட்டு முறையை கடைப்பிடித்து திருமணத்தை நடத்த வேண்டும். ஆண், பெண் ஜாதகத்தில் இருக்கும் குறைகளை நிறைவு செய்யும் விதமான

குருமங்கள யோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு விதமான யோகங்களில் குருமங்கள யோகம் சிறப்பான யோகமாகும். ராசி அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வை மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் மேல் பதிகிறது இது குரு மங்கள யோகமாகும். தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும் அற்புதமான மாதம். புகழ் ,அந்தஸ்து கெளரவம் அதிகரிக்கும். நம்பிக்கை, நாணயம் உயரும். குடும்ப நலனுக்காக ஆன்மீக யாத்திரை சென்று வர திட்ட மிடுவீர்கள். சிலருக்கு அரசிடமிருந்து இலவச வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம் வரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.சில சமூக ஆர்வளர்களுக்கு அரச கௌரவம் கிடைக்கும்.வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். விவசாய நிலத்திற்கு புதிய ஒப்பந்ததாரர், குத்தகைதாரர்கள் கிடைப்பார்கள்.

பொருளாதாரம்

மாத துவக்கத்தில் தன ஸ்தான அதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்தில் நிற்கும் வரை பொருளாதாரம் மந்த நிலை நிலவும். விரய ஸ்தானம் பலம் பெறுவதால் பண மோசடி மிகுதியாக இருக்கும். இரண்டாம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். நெருங்கிய உறவினர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுத்தால் திரும்ப வராது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மன சங்கடம் அதிகமாகும் ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

முதலீட்டாளர்கள்

உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும்.ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒருவரின் வேலையில் மற்றவர் குறுக்கிடாமல் இருந்தால் தப்பித்து விடுவீர்கள். தொழில் கூட்டாளிகள், பங்குதாரர்கள் தங்களின் வரைமுறைக்கு உட்பட்ட பணிகளை மட்டும் செய்து அடுத்தவர் விசயத்தில் தலை இடாமல் இருந்தால் எந்த வம்பு தும்பும் இல்லாமல் காலத்தை கடத்தலாம். திரைத்துறையினர் மிகப் பெரிய முதலீட்டில் புதிய படம் எடுப்பது நல்லதல்ல. கலைத்துறையினருக்கு வரும் வாய்ப்பு திடீரென கை நழுவிப் போகும்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறிய பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கண் துடைப்பிற்கான பதவி உயர்வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும் உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. சிலர் பணிச்சுமை காரணமாக விருப்ப ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. சிலருக்கு கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். சிலருக்கு மனதிற்கு பிடிக்காத உத்தியோக இடமாற்றம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வேலையை தக்க வைக்க முடியும்.

அரசியல்வாதிகள்

பதவி ஸ்தான அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில மறைவதால் அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் உங்களை வந்து பார் என்று வம்புக்கு இழுக்கும். பிறரை பற்றிய விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது.எனினும் சுய ஜாதகர் ரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் எதிர்பாராத சம்பவங்களையும் திருப்பங்களையும் நடத்துவார் என்பதால் மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். பெரிய பதவிகளும் உங்களுக்கு கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது.

பெண்கள்

உங்களின் திறமையும் பேச்சு சாதுர்யமும் பல இடங்களில் கை கொடுக்காது.எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற உணர்வு வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தலை தூக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு குற்றச்சாட்டுகள் மன வேதனையை தரும்.மறைமுக எதிர்ப்புகளும், சூழ்ச்சிகளும் போட்டிகளும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் நயவஞ்சக செயலால் சமுதாயத்தின் மேல் வெறுப்பு ஏற்படும். சற்று அலைச்சல் மிகுந்த பணியாக இருக்கும். சரியான நேரத்திற்கு ஓய்வு எடுக்க முடியாது. நேரத்திற்கு உண்ண முடியாமல் காலம் தாழ்த்தி கிடைத்த உணவை உண்டு காலம் கடத்த நேரும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் பகைவர்களிடம் கூட அன்பாக பேசி காரியத்தை சாதிக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டால் வீட்டு விஷயம் வெளியே வராமல் காக்கப்படும்.

கவனம் தேவை

செவ்வாய் சனி சேர்க்கை - 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் உள்ள சனியுடன் ராசி அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். விரய ஸ்தானத்தில் சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுவதால் அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீண் அலைச்சலை ஏற்படுத்தும் பயணங்கள் செய்ய நேரும். உங்கள் முன்னோர்களின் பரம்பரை நோயான சுகர், பிரஷர், பிபி உங்களை தாக்க தயாராகும் காலம். இதிலிருந்து தப்பிக்க முறையான உடற்பயிற்சி அவசியம். இல்லையேல் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய வியாதி தாக்கும். அதுமட்டுமல்லாமல் சரியான மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்வது நலம்.வெகு சிலருக்கு காதில் சீழ் வடிதல், காது வலி போன்ற காது தொடர்பான பிரச்சனையால் தலை வலி வரும். 2, 4 சக்கர வாகனங்களில் செல்லும் போது உரிய ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும். இரண்டு சக்ர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்ல கூடாது. நான்கு சக்ர வாகனங்களை இயக்குபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது. ஜாதகத்தை பொருத்த வேண்டும்.

பரிகாரம்

தொழில் தடை, கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, பெளர்ணமி தோறும் சத்திய நாராயணர் பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com