அரக்கோணம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து

அரக்கோணம் அருகே சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையிலிருந்து அரக்கோணம் வழியே காட்பாடி செல்லும் அனைத்து ரெயில்சேவையும் நிறுத்தப்பட்டது.
அரக்கோணம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து
Published on

சென்னை:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

சித்தேரியில் இருந்து காட்பாடிக்குச் சென்ற 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் தடம் புரண்டுள்ளது. என்ஜினில் இருந்து 3-வது ரெயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இறங்கின.

மின்சார ரெயில் தடம் புரண்டதால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும் அனைத்து ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com