தமிழ்நாடு செய்திகள்

ஜாமின் நிபந்தனைகள் எளிதாக இருக்க வேண்டும்- விசாரணை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2025-01-29 14:36 IST   |   Update On 2025-01-29 14:36:00 IST
  • செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சென்னை உயர்நீதிமன்றம் விசரணை நடத்தியது.
  • ஜாமின் நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாமல் 104 பேர் சிறையில் உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது.

ஜாமின் நிபந்தனைகள் எளிதில் நிறைவேற்றக் கூடியதாக விதிக்கப்பட வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஜாமின் கிடைத்தும் பிணை செலுத்த முடியாமல் 800 கைதிகள் சிறையில் இருப்பதாக செய்தி வெளியானது.

செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சென்னை உயர்நீதிமன்றம் விசரணை நடத்தியது.

அப்போது, ஜாமின் நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாமல் 104 பேர் சிறையில் உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது.

மேலும், நீதிமன்ற உத்தரவின்படி இதுவரை 32 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்ட பணிகள் ஆணையம் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜாமின் நிபந்தனைகள் எளிதில் நிறைவேற்றக் கூடியதாக விதிக்கப்பட வேண்டும் என்றும், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்குவதில் எந்த பயனும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதைதொடர்ந்து, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags:    

Similar News