தமிழ்நாடு
மறைந்த விஜயகாந்தின் படத்திறப்பு விழா- 24ம் தேதி நடக்கிறது
- தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்கள் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.