உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

வரி செலுத்தினால் ஊக்கத்தொகை வெள்ளகோவில் நகராட்சி அறிவிப்பு

Published On 2023-07-30 05:50 GMT   |   Update On 2023-07-30 05:50 GMT
  • நடப்பாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் போனஸ் வழங்கப்படும்
  • செலுத்த வேண்டிய கட்டணத்தில் 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

வெள்ளகோவில்:

வெள்ளக்கோவில் நகராட்சியில் நடப்பாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் போனஸ் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக நகராட்சி ஆணையா் (பொறுப்பு) எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- வரிவசூல் செய்வதில் நகராட்சி நிா்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2023 - 24 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியினை அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மக்கள் நலப் பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்த நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய குடிநீா்க் கட்டணம், இதர வரியினங்களை பொதுமக்கள் முறையாகச் செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

Tags:    

Similar News