உள்ளூர் செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்ற காட்சி.

பெருமாநல்லூரில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2023-01-22 08:53 GMT   |   Update On 2023-01-22 08:53 GMT
  • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
  • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டது.

பெருமாநல்லூர் :

திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு போக்குவரத்து காவல் நிலையம் அருகில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதனை பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம், திருப்பூர் தி ஐ பவுண்டேஷன் ஆகியன இணைந்து நடத்தியது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட காவல்துறை, அவிநாசி காவல் உட்கோட்டம், பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News