திருப்பத்தூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

கலெக்டர் தொடங்கி வைத்தார்10 அணிகள் பங்கேற்பு
 மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்த காட்சி.
 மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்த காட்சி.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் விளையாட்டு சங்கத்தின் 2022 - 2023 ஆண்டுக்கான முதல் லீக் போட்டிகள் தூய நெஞ்சக் கல்லூரியில் தொடங்கியது. கிரிக்கெட் போட்டிக்கு திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஏ.சுந்தர் தலைமை தாங்கினார்.

அனைவரையும் செயலாளர், ஜெயச்சந்திரன், வரவேற்றார், திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹாவிற்கு வீரர்களை அறிமுகம் செய்து கலெக்டர் பேட்ங செய்து தொடங்கி வைத்துப் பேசினார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளரும் (பொது) துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர், திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், தூயநெஞ்சக் கல்லுரி உடற் கல்வி இயக்குனர் டாக்டர்.பின்டோ தேவராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டி தொடரில் முதல் பிரிவில் 10 அணிகளும், இரண்டாவது பிரிவில் 10 அணிகளும் விளையாடுகிறது.

முதல் போட்டியில் மொன்ஸ்டர் கிரிக்கெட் கிளப் அணியும் ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணியும் விளையாடியனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com