உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இரவு காவலாளி திடீர் மரணம்

Published On 2023-09-16 06:21 GMT   |   Update On 2023-09-16 06:21 GMT
  • போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  • மாரடைப்பு காரணமாக தியாகராஜன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆர்.கே. பேட்டை அடுத்த வங்கனூர் காலனியில் வசித்தவர் தியாகராஜன் (வயது 47). இவர் திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலன் மற்றும் மாணவர் விடுதியில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இவரோடு விடுதியின் சமையலர் கோபிநாத் என்பவரும் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை 4 மணி அளவில் கழிவறைக்கு சென்ற தியாகராஜன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. அறையை விட்டு வெளியே வந்து சமையலர் கோபிநாத் பார்த்த போது வராண்டாவில் தியாகராஜன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத் விடுதி அதிகாரிகள் மற்றும் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் பிணத்தைக் கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாரடைப்பு காரணமாக தியாகராஜன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்து போன இரவு காவலர் தியாகராஜனுக்கு பன்னீர் செல்வி என்ற மனைவியும் தனுஸ்ரீ, கோகுல்ராஜ் ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

Similar News