ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று- 6 விசைப்படகுகள் சேதம்

சூறாவளி காற்றால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டன. விண்ணரசு, ராஜூவ், கென்னடி, கிருபை, சவரிமுத்து, ஜோசுவா ஆகியோரின் படகுகள் பகுதி வாரியாக சேதம் அடைந்தன.
ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று- 6 விசைப்படகுகள் சேதம்
Published on

ராமேசுவரம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை ராமேசுவரம் துறைமுகத்தில் நேற்று நங்கூரமிட்டு நிறுத்தி இருந்தனர்.

நேற்று மாலை முதல் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

சூறாவளி காற்றால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் விண்ணரசு, ராஜூவ், கென்னடி, கிருபை, சவரிமுத்து, ஜோசுவா ஆகியோரின் படகுகள் பகுதி வாரியாக சேதம் அடைந்தன. இதையடுத்து மற்ற மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், சூறாவளி காற்றால் எங்களது படகுகள் சேதமடைந்துள்ளன. இதனை சரி செய்ய அதிக செலவாகும். எனவே தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com