உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர்.

சேலம் டவுன் போலீஸ் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

Published On 2023-07-02 08:24 GMT   |   Update On 2023-07-02 08:24 GMT
  • சேலம் சின்னதிருப்பதி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
  • சர்க்கரை மற்றும் சிறுநீரக நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

சேலம்:

சேலம் சின்னதிருப்பதி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53). இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு சர்க்கரை மற்றும் சிறுநீரக நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். அவரது உடலுக்கு சேலம் மாநகர போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News