சீலநாயக்கன்பட்டியில் அரசு பஸ் - லாரி மோதலால் போக்குவரத்து பாதிப்பு

சேலம், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே பஸ் சென்ற போது, அந்த வழியாக எதிரே சேலத்தை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.அப்போது, லாரி பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த அரசு பஸ்சில் உரசி, ரவுண்டான சுவரில் மோதி நின்றது.
விபத்தை ஏற்படுத்திய லாரியை படத்தில் காணலாம்.
விபத்தை ஏற்படுத்திய லாரியை படத்தில் காணலாம்.
Published on

சேலம்:

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை நாமக்கல்லுக்கு அரசு பஸ் சென்று கொண்டி ருந்தது. சேலம், சீலநா யக்கன்பட்டி ரவுண்டானா அருகே பஸ் சென்ற போது, அந்த வழி யாக எதிரே சேலத்தை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது, லாரி பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த அரசு பஸ்சில் உரசி, ரவுண்டான சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

விபத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், லாரியின் பிரேக் திடிரென பழுதானதால், சுதாரித்துக் கொண்ட லாரி டிரைவர், பஸ் மீது மோதாமல் இருக்கு ஓரமாக நிறுத்த முயன்றபோது, பஸ்சில் உரசியது தெரியவந்தது. இந்த விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com