விமான நிலைய பெயர் பலகை அகற்றம்-புலிப்படை கட்சி நிர்வாகி புகார்

தேவர் ஜெயந்தி விழாவில் மதுரை விமான நிலைய பெயர் பலகை அகற்றப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. மீது கவர்னர், டி.ஜி.பி.யிடம் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகி புகார் தெரிவித்தார்.
முத்துராமலிங்கம்
முத்துராமலிங்கம்
Published on

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த 'பசும்பொன் முத்துராம லிங்க தேவர் மதுரை விமான நிலையம்' என்ற பிரமாண்ட கட்-அவுட்டின் பெயர் பலகை கடந்த 29-ந் தேதி இரவு கமுதி காவல் துறையினரால் அகற்றப்பட்டது.

இதை கண்டித்து பசும்பொன்னில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் அறிவித்தார். இதற்கிடையே மீண்டும் பெயர் பலகை பொருத்தப்ப ட்டிருந்தது.

அதனால் காவல்துறை யினருக்கு நன்றி தெரிவித்து, உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக கருணாஸ் அறிவித்தார்.

இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழவையொட்டி பசும்பொன்னில் வைக்கப்பட்டிருந்த மதுரை விமான நிலைய கட்-அவுட்டை சுதந்திர போராட்ட தியாகியும், அனைத்து சமுதாய மக்களா லும் போற்றப்படும் தேசிய தலைவரின் பெயரை கமுதி காவல் துணை கண்காணிப்பாளர், வருவாய்த்துறை அதிகாரி களின் உத்தரவின்றி, தன்னிச்சையாக உள்நோக்க த்துடன் அகற்றி உள்ளார்.

அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில செயலாளர் முத்துராமலிங்கம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஐ.ஜி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகியோருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com