காரிமங்கலம் பேரூராட்சியில் திட்ட பணியை அதிகாரி ஆய்வு

சுமார் 85 கடைகள் மற்றும் நவீன கழிவறை ஆகியவற்றுடன் சந்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.இப்பணியை பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரிமங்கலம் பேரூராட்சியில் திட்ட பணியை அதிகாரி ஆய்வு
Published on

 காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை மேம்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி தலைவர் மனோகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதை அடுத்து அமைச்சர்கள் நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பரிந்துரையின் பேரில் சந்தை மேம்படுத்தும் பணிக்கு ரூ.2.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதை அடுத்து சுமார் 85 கடைகள் மற்றும் நவீன கழிவறை ஆகியவற்றுடன் சந்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இப்பணியை பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மாடு சந்தை நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு அதை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத்துடன் ஆலோ சனை மேற்கொண்டார்.

ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா, வார்டு கவுன்சிலர்கள் ரமேஷ், மாதப்பன், சக்திரமேஷ், பிரியாசங்கர், உதவி பொறியாளர் முருகன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com