மாரியம்மன் கோவிலில் 1008 பால்குட அபிஷேகம்

மாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து நாகேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் புடைசூழ பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.காலையில் தொடங்கிய பால் அபிஷேகம் மதியத்திற்கும் மேல் தொடர்ந்தது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
மாரியம்மன் கோவிலில் 1008 பால்குட அபிஷேகம்
Published on

கொடுமுடி:

கொடுமுடி அருகே ஊஞ்சலூரில் மாரியம்மன் கோவில், செல்லா ண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 17-வது ஆண்டாக 1008 பால் குட அபிஷேகம் நடைபெற்றது.

இதனையொட்டி லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்றது. அலங்க ரிக்கப்பட்ட மாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து நாகேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் புடைசூழ பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் காவிரி கரையில் உள்ள நாகே ஸ்வரர் கோவிலில் வைத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்ப ட்டது. ஊஞ்சலூர் மற்றும் சுற்றுப்புரத்தில் உள்ள கொளத்து ப்பாளையம், கருக்கம்பாளையம், அமராவதி புதூர், சொட்டையூர், வள்ளியம்பாளையம், காசிபாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து பால்குடம் எடுத்து வந்தவர்கள் அனைவரும் நாகேஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

அதனை தொடர்ந்து 10½ மணியளவில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சப்பரத்தில் அம்மன் முன்னே வர ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் பால் எடுத்து தொடர்ந்து வந்தனர்.

ஊர்வலம் ஊஞ்சலூரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. முதலில் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் துவங்கி யது. ஊர்வலமாக வந்தவர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஒரு பிரிவி னரும் மற்றொரு பிரிவினர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கும் சென்று பால் அபிஷேகம் செய்தனர். காலையில் தொடங்கிய பால் அபிஷேகம் மதியத்திற்கும் மேல் தொடர்ந்தது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com