உள்ளூர் செய்திகள்

அரியலூர் நுகர்வோர் கோர்ட்டிற்கு சென்னையிலிருந்து வழக்குகள் மாற்றம் - குறைதீர் ஆணைய நீதிபதி தகவல்

Published On 2022-07-21 10:05 GMT   |   Update On 2022-07-21 10:05 GMT
  • அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விரைவில் சமரச மையமும் தொடங்கப்படவுள்ளது.
  • மத்தியஸ்தர் பணிக்கான நேர்காணல் முடிவடைந்து விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

அரியலூர்:

சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் அரியலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, அதன் விசாரணை நாள் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த 250 வழக்குகளை விரைந்து விசாரணை மேற்கோண்டு, தீர்ப்பு வழங்குவதற்காக, அந்த வழக்குகள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளுக்கு விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆணையத்தில் உள்ள நாட்குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் அல்லது நுகர்வோர் ஆணையகளுக்கான இணையதளத்தின் மூலம் வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்த வழக்குகளை நடத்துவதற்கு புகார்தாரர்களும், எதிர்தரப்பினரும் வழக்குரைஞர்களும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விரைவில் சமரச மையமும் தொடங்கப்படவுள்ளது. தொடங்கப்படும் மத்தியஸ்தர் பணிக்கான நேர்காணல் முடிவடைந்து விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. நுகர்வோர் வழக்குகளை சமரச மையத்தின் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News