மாளிகை மேடு அகழாய்வில் அன்றாடம் நடைபெறும் பணிகளை உடனுக்குடன் மதிப்பீடு செய்ய உத்தரவு
- மாளிகை மேடு அகழாய்வில் அன்றாடம் நடைபெறும் பணிகளை உடனுக்குடன் மதிப்பீடு செய்ய உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது
- முதல்வர் பணியை தொடங்கிவைத்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ராஜேந்திர சோழனின் அரண்மனை அமைந்திருந்த மாளிகை மேட்டில் நடந்து வரும் இரண்டாம் கட்ட ஆய்வு பணிகளை தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
மாளிகைமேடு இரண்டாம் கட்ட ஆய்வு பணியை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது கடந்த மார்ச் 11ஆம் தேதி காணொளி மூலம் தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் இதற்கான பணியை தொடங்கிவைத்தார்.
இதையடுத்து நடந்த விழாவில் சோழர் காலத்து கட்டடங்கள் பழங்கால அரண்மனை சுற்றுச் சுவர்களின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு பழங்கால பாறை மற்றும் ஐம்பொன் கலந்த செப்பு காப்பு கண்டெடுக்கப்பட்டது. தமிழக தொல்லியல் துறை ஆணையர் ஜீவானந்தம் தலைமையிலான குழுவினர் மாளிகையில் நடந்தவரும் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தனர்.
நீளம் மற்றும் உயரத்தில் அளவுகளை சரி பார்த்து அன்றாடம் நடைபெறும் பணிகளை உடனுக்குடன் மதிப்பீடு பட்டியல் தயார் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். என அலுவலர்களிடம் அறிவுறுத்தினர் தொல்லியல் வல்லுநர் பேராசிரியர் ராஜன் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி பொறுப்பாளர் சுபலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.