என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    குழந்தை பாக்கியம் அருளும் பூஜை
    X

    குழந்தை பாக்கியம் அருளும் பூஜை

    • இந்தப் பூஜை செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும்.
    • இப்பூஜையால் பிறவி எடுக்காத புண்ணிய கதி அடையலாம்.

    சித்திரை மாத பவுர்ணமி அன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும்.

    மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    இந்தப் பூஜை செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும்.

    சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பவுர்ணமி என்றால் மிகவும் விசேஷம்.

    வைகாசி பவுர்ணமியில் அம்மனுக்கு நீலநிற ஆடையும், தங்க ஆபரணமும் அணிவித்து அலங்கரிக்க வேண்டும்.

    சந்தனாபிஷேகம் செய்வது சிறப்பு.

    எலுமிச்சை சாதம், சீரகமும், சர்க்கரையும் கலந்த சாதம், விளாம்பழம் இவற்றை அம்பிகைக்கு படைத்து வழிபட வேண்டும்.

    இப்பூஜையால் பிறவி எடுக்காத புண்ணிய கதி அடையலாம்.

    Next Story
    ×