search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பவானியில் அன்னதானம் சிறப்பு
    X

    பவானியில் அன்னதானம் சிறப்பு

    • உங்க முன்னோர்களின் ஆசியும், வழிகாட்டலும் கிடைக்கும்..
    • குழந்தை தாமதத்தால் தவிப்பவர்களுக்கு இது நல்ல பரிகாரம் ஆகும்.

    இதுவரைக்கும் திதி தர்ப்பணம் எங்க குடும்பத்துல எங்க அப்பா,தாத்தா யாரும் கொடுத்தது இல்லை..எனக்கும் அப்படீன்னா என்னன்னே தெரியாது... எங்க முன்னோர்கள் யாரையும் நினைச்சு கோயிலுக்கு போய் திதி தர்ப்பணம் இதுவரை கொடுத்ததே இல்லை... என்பவர்கள் வரும் மகாளய பட்ச அமாவாசையில் உங்க முன்னோர்களை நினைச்சு திதி தர்ப்பணம் கொடுங்க.. உங்க பிள்ளைகள் எதிர்காலம் சிறக்கும்.. அவர்களுக்கு உங்க முன்னோர்களின் ஆசியும், வழிகாட்டலும் கிடைக்கும்..

    அமாவாசையில் பசுக்களுக்கு கோதுமை தவிடு 2கிலோ, வெல்லம், அகத்தி கீரை கலந்து ஊறவைத்த உணவை தரலாம்.. ஏழைகளுக்கு அன்னதானம்தரலாம்... ஆதரவற்றோர், முதியோர், ஊனமுற்றோர்க்கு உதவிகள் செய்யலாம். இதனால் உங்கள் வாழ்வில் பல சிக்கல்கள் தீரும்..

    உங்க முன்னோர்களின் ஆசியும், வழிகாட்டலும் கிடைக்கும்..இது முக்கியமான ஜோதிட பரிகாரம் ஆவதால் அஷ்டம சனி, ஏழரை சனி, முன்னோர் சாபம், பித்ரு சாபம், புத்திர தோசத்தால் குழந்தை தாமதத்தால் தவிப்பவர்களுக்கு இது நல்ல பரிகாரம் ஆகும்... காவிரி, அமிர்த நதி, காவிரி, பவானி மூன்று முக்கிய நதிகள் கூடும். பவானி கூடுதுறை அருள்மிகு சங்கமேஸ்வரர் ஆலயத்தில் அன்னதானம் செய்வது மிக சிறப்பு.

    Next Story
    ×