என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் தொடரில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும்: ஜடேஜாவிடம் கூறிய டோனி
Byமாலை மலர்12 Feb 2018 2:04 PM GMT (Updated: 12 Feb 2018 2:04 PM GMT)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் வாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும் என டோனி கூறினார் என்று ஜடேஜா தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK #MSDhoni
இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருபவர் ரவீந்திர ஜடேஜா. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதால் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்கள்.
தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா பந்து வீச்சில் சிறப்பாக செயல்படாவிட்டாலும், பேட்டிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். நேற்று நடைபெற்ற ஜார்க்கண்ட் அணிக்கெதிராக 116 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்ருடன் 113 ரன்கள் குவித்து 333 ரன்கள் இலக்கை எட்ட முக்கிய காரணமாக இருந்தார்.
விரைவில் ஐபிஎல் 2018 சீசன் வர இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். அப்போது பேட்டிங்கில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என டோனி தன்னிடம் கூறியதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் ‘‘டோனி என்னிடம், முறையான பேட்ஸ்மேனுக்கான திறமை என்னிடம் உள்ளது. அவ்வப்போது வந்து அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனாக இருக்கக்கூடாது என்றார். இதை நான் உண்மையிலேயே விரும்புகிறேன்.
ஆகவே, நான் பேட்டிங்கில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறேன். விளையாடும்போது முக்கிய பாத்திரமாக மாற முயற்சி செய்வேன். மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருப்பது எனக்கு ஊக்கமளிக்கக்கூடியதாகும். தற்போது நான் பந்து வீசி வரும் முறை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
உண்மையில், நான் தற்போது பேட்டிங்கில்தான் அதிக கவனம் செலுத்து வருகிறேன். 20 ரன்கள் அடிக்கும் பேட்ஸ்மேன் என்ற பெயரெடுக்க நான் விரும்பவில்லை. ஜார்க்கண்ட் அணிக்கெதிராக நிலைத்து நின்று சதம் அடித்ததுபோல் நிலையாக நின்று விளையாட விரும்புகிறேன்’’ என்றார். #IPL2018 #CSK #MSDhoni
தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா பந்து வீச்சில் சிறப்பாக செயல்படாவிட்டாலும், பேட்டிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். நேற்று நடைபெற்ற ஜார்க்கண்ட் அணிக்கெதிராக 116 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்ருடன் 113 ரன்கள் குவித்து 333 ரன்கள் இலக்கை எட்ட முக்கிய காரணமாக இருந்தார்.
விரைவில் ஐபிஎல் 2018 சீசன் வர இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். அப்போது பேட்டிங்கில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என டோனி தன்னிடம் கூறியதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் ‘‘டோனி என்னிடம், முறையான பேட்ஸ்மேனுக்கான திறமை என்னிடம் உள்ளது. அவ்வப்போது வந்து அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனாக இருக்கக்கூடாது என்றார். இதை நான் உண்மையிலேயே விரும்புகிறேன்.
ஆகவே, நான் பேட்டிங்கில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறேன். விளையாடும்போது முக்கிய பாத்திரமாக மாற முயற்சி செய்வேன். மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருப்பது எனக்கு ஊக்கமளிக்கக்கூடியதாகும். தற்போது நான் பந்து வீசி வரும் முறை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
உண்மையில், நான் தற்போது பேட்டிங்கில்தான் அதிக கவனம் செலுத்து வருகிறேன். 20 ரன்கள் அடிக்கும் பேட்ஸ்மேன் என்ற பெயரெடுக்க நான் விரும்பவில்லை. ஜார்க்கண்ட் அணிக்கெதிராக நிலைத்து நின்று சதம் அடித்ததுபோல் நிலையாக நின்று விளையாட விரும்புகிறேன்’’ என்றார். #IPL2018 #CSK #MSDhoni
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X