

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. சமீபத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இத்தேர்தலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என கருதப்பட்டதால் அக்கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி திருத்துறைப்பாண்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஒரு vox pop நடத்தினோம்.
39 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக அ.தி.மு.க.-விற்கு 19 பேர் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, தி.மு.க.-விற்கு 12 பேரும், த.வெ.க.-விற்கு 08 பேரும் வாக்களிப்பதாக தெரிவித்தனர்.
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் என்று யாரும் தெரிவிக்கவில்லை.
இது மக்களின் மனநிலையை அறிய ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில்தான் நமக்கு தெரியவரும்.